கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே போராடி வரும், சவாலான நேரத்தில் தன்னுடைய கடமையை சிறப்பாக ஆற்றி வரும் ஜோகிந்தருக்கு தலைவணங்குவதாக ஐ.சி.சி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், '2007ல் 'டுவென்டி-20' உலக கோப்பை ஹீரோ: 2020ல் ரியல் வேர்ல்டு ஹீரோ. கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு ஒரு போலீஸ்காரராக, இந்தியாவின் ஜோகிந்தர் சர்மா, சர்வதேச சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது கடமையை நிறைவேற்றி வருகிறார்' எனவும் கூறியுள்ளது. ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாட கூடாதென விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.